.:!:. குறிஞ்சி மலர் - Kurinji Malar .:!:.

"கற்போம் கற்பிப்போம்.. கல்வியின் சிறப்பு கரும்பின் இனிப்பு" - சான்றோர்

Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

தேர்தல் 2011 [தமிழ்நாடு, புதுச்சேரி] - ELECTION 2011 [Tamilnadu, Puducherry]

நீண்ட நாளுக்கு பிறகு என்னுடைய பதிவினை தொடருகிறேன்... தேர்தல் திருவிழா 2011, ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி நடைபெற்று மே 13ஆம் தேதி முடிவுகள் வெளியாகின...இதில் வெளியான இரு மாநில முடிவிகளும் எதிர்பார்த்த படியே இருந்தது... மக்கள் மாற்றத்தை விரும்பி, ஊழலை எதிர்த்து ஆட்சியை மாற்றி எழுதி இருந்தனர்...
தமிழ்நாடு 
234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு, ஆளும்கட்சியாம் தி.மு.க வை நீக்கி அ.தி.மு.க வை வெற்றி பெற செய்துள்ளனர்... இதில் அ.தி.மு.க கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி உள்ளது...
அ.தி.மு.க- 150 [160]
தே.மு.தி.க- 29 [41]
மற்றவை- 24 [33]

மொத்தம் - 203 [234]

மேலும் தி.மு.க வெறும் 31 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது...

தி.மு.க- 23 [119]
காங்கிரஸ் - 05 [63]
மற்றவை- 03 [52]

மொத்தம் - 31 [234]

இதன்படி செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வர் ஆக போவது உறுதி...


புதுச்சேரி 


என்.ஆர்.காங்கிரஸ் - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி : 
புதுச்சேரி முதல்வராகிறார் ரங்கசாமி:

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. புதிய முதல்வராக ரங்கசாமி பதவியேற்கிறார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக உள்ள காங்., கட்சி, தி.மு.க., - பா.ம.க., - வி.சி., ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து போட்டியிட்டது. காங்., கட்சியில் இருந்து வெளியேறி, அகில இந்திய என்.ஆர்.காங்., என்ற புதிய கட்சியை துவக்கிய ரங்கசாமி, அ.தி.மு.க., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். காங்., கட்சி 17 தொகுதிகளிலும், தி.மு.க., 10, பா.ம.க., 2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

காங்., கட்சிக்கு இணையாக, என்.ஆர்.காங்., கட்சியும் 17 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இந்த கூட்டணியில் அ.தி.மு.க., 10 தொகுதிகளிலும், இந்திய கம்யூ., - தே.மு.தி.க., ஆகியவை தலா 1 தொகுதியிலும் போட்டியிட்டன. தேர்தலில் காங்., கூட்டணிக்கும், என்.ஆர்.காங்., கூட்டணிக்கும் இடையில் நேரடி போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், என்.ஆர்.காங்., கூட்டணி 20 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் அமைகிறது. புதிய முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்கிறார். ஏற்கனவே, முதல்வராக ரங்கசாமி இரு முறை பதவி வகித்துள்ளார். தற்போது, மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

30 தொகுதிகளின்  வெற்றி பெற்ற கட்சிகளின் விவரம் :

என்.ஆர்.காங்கிரஸ்., கூட்டணி
என்.ஆர்.காங்., - 15
அ.தி.மு.க., - 5

காங்கிரஸ் கூட்டணி
காங்., - 7
தி.மு.க., - 2

சுயேச்சை - 1


இரண்டு தொகுதிகளிலும் ரங்கசாமி வெற்றி:


புதுச்சேரியில் முதன் முறையாக, இரண்டு தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கதிர்காமம், இந்திராநகர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதியிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். இந்திரா நகர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்.,வேட்பாளர் ஆறுமுகத்தை விட, ரங்கசாமி கூடுதலாக 16,677 ஓட்டுகள் பெற்றார். கதிர்காமம் தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாளை விட, ரங்கசாமி 9,757 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

புதுச்சேரியில் முதன் முறையாக, இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரங்கசாமி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் வெளியான போது ஆன்மிகத்தில் ஆழ்ந்திருந்த ரங்கசாமி:

தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது, ரங்கசாமி ஆன்மிகத்தில் ஆழ்ந்திருந்தார். ஓட்டு எண்ணிக்கையொட்டி, அகில இந்திய என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி வீடு நேற்று பரபரப்பாக காணப்பட்டது. அதிகாலை 4 மணிக்கே ரங்கசாமியின் வீட்டு முன் தொண்டர்கள் குவிய துவங்கினர். கதிர்காமத்தில் உள்ள கதிர்வேல் சுவாமி கோவில், காளியம்மன் கோவில், வலம்புரி விநாயகர் கோவில்களுக்கு ரங்கசாமி நேற்று காலை சென்று வழிபட்டு விட்டு வீடு திரும்பினார்.

தேர்தல் முடிவுகள் வெளியாக துவங்கியவுடன், ரங்கசாமி வீட்டில் உள்ள "டிவி'க்களில், தேர்தல் முடிவு நிலவரங்களை தொண்டர்கள் ஆரவாரத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். ரங்கசாமியின் தாயார் பாஞ்சாலி வீட்டு கீழ்தள "டிவி' அறையில் தொண்டர்களுடன் அமர்ந்து, ஆர்வத்துடன் தேர்தல் முடிவுகளை கவனித்து கொண்டிருந்தார். கதிர்காமம், இந்திரா நகர் தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்றது அறிவிக்கப்பட்ட போது, உற்சாகமாக கட்டை விரலை உயர்த்தி கட்சி தொண்டர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 

ரங்கசாமியோ "டிவி' ஏதும் பார்க்காமல் வீட்டு மேல்தளத்தில், அப்பா பைத்தியம் சுவாமி உருவ படத்திற்கு அருகே, நாற்காலியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தார். தொண்டர்கள் அவ்வபோது ரங்கசாமியிடம் சென்று தொகுதி நிலவரங்களை விவரித்து கொண்டிருந்தனர். ஆனால், ரங்கசாமி பதில் ஏதும் கூறாமல், அப்பா பைத்திய சுவாமிகள் படத்தை பார்த்தபடி மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். என்.ஆர்.காங்., கூட்டணி 20 இடங்களில் அமோக வெற்றி பெற்றதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர். ஆனால், ரங்கசாமி வழக்கம்போல் அமைதியாக, அப்பா பைத்திய சுவாமிகளை நினைத்தபடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்..

அவர் பிராத்தனையும், எங்கள் பிராத்தனையும் வீண் போகாமல் 
தலைவருக்கு வெற்றியை தேடி தந்துள்ளது...
ந.ரங்கசாமி வாழ்க பல்லாண்டு..
உங்கள் சேவை புதுவைக்கு தேவை 

இவன்
உங்கள் நல்லாட்சியை 
என்றும் விரும்பும் 
புதுவை வாழ் குடிமகன் 
இர. வெங்கடேஷ் MSc, HDCA
[கணினி மென்பொருள் பொறியாளர்
 [லாசுபேட்டை சட்டமன்ற தொகுதி]


All India N.R Congress - First Meeting

Puducherry, Mar 6 : 

The first political conference of the All India N R Congrss, floated by former chief minister N Rangasamy, was held here this afternoon.



Even though the enforcement of the Model Code of Conduct of Elections dampened the festive mood, posters and banners erected with permission from authorities were seen near the AFT Thidal, the venue of the conference.

A massive crowd attended the conference which was opened by Party Founder N Rangasamy by lighting the traditional lamp.

Former Minister M Chandragasu, who joined the party two days back, presided while Party General Secretary V Bhalan welcomed the gathering. 

Mr. N.Rangasamy (Left to right, Third Person) Showing his Victorious,
"All India N.R Congress" Party Flag..

Pondicherry "Mudhaliarpet" fully Traffic Jam.. (Near AFT Mill Road)

Pondicherry "Mudhaliarpet" fully Traffic Jam.. (Puducherry - Cuddalore Road)




WATCH HIS FIRST MEET






N.R QUITS CONGRESS - PRESS MEET




ALL THE VERY BEST 
TO FUTURE PUDUCHERRY  
CHIEF MINISTER N.R

நாளைய புதுவை (புதுச்சேரி) 
முதல்வர் N.R க்கு வாழ்த்துக்கள்



Sincere Thanks:

With Pleasure:

Illayathalapathy Vijay - First Public Meeting

Actor Vijay addressing a public meeting to express solidarity with the
fisherfolk in Nagapattinam on Tuesday(22-02-2011). 


NAGAPATTINAM: It was mob frenzy writ large at the public meeting organised by the Vijay Makkal Iyakkam of actor Vijay in ‘solidarity' with the fisherfolk, here on Tuesday.

While cautioning against giving a political hue to his public meeting, Vijay described his presence as an act of ‘social consciousness,' in support of his ‘brethren subject to attacks by the Sri Lankans.'

The actor urged his fans to send in telegrams to the Prime Minister and the Chief Minister demanding action against recurrent “Sri Lankan attacks.”

An address laced with rhetoric, Vijay called upon the powers that be to not construe the “silence of the Tamils as cowardice.”

A mild lathi charge followed after fans attempted to ransack the stage.

A crowd, whose strength was touted to have crossed about 20,000, braved the lashing rains to listen to the brief speech.

Vijay handed over a solatium of Rs.2 lakh to the family of the Pushpavanam-based fisherman allegedly killed in a Sri Lankan naval attack.

The gathering also observed a minute's silence over the demise of Parvathy, mother of slain LTTE leader Prabakaran.

















Politics Damash..... Funny.. :)

Do u have Facebook Account... Signup immediately... 
And Add As Your Friend.... Quick...

Selvi Jaya's Account


Thalaivar Karuna's Account

Mr. Raasa's Account

...JUST FOR FUN...

2G Spectrum Scam - Detailed Essay (Tamil)

 தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.
மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.
இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாயக் கணக்கு:
இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.

இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?

மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.

ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.
இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL" போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.
துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.
துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.
துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.


துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.
துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.

ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.

அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.


இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. E-MAIL, FAX, FACEBOOK, ORKUT, TWITTER, BLOGS என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி

Lets Imagine... What Celebrities Think... - Funny.. (Part 2)

Full and Full Imagination... Not Mean to Hurt Anyone... For Fun

Source: http://valaimanai.blogspot.com/

Lets Imagine... What Celebrities Think... - Funny..


Source: http://valaimanai.blogspot.com/

Page Hitz

My Another Blog

My Another Blog
Maha Chudar - My Another random flavours blog about Information Technology and Indian Art & Culture

குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர்

Search Here..

My Followers

FACEBOOK

About Me

My photo
Lawspet, Puducherry, India
Completed MSc Computer Science (2008-2010) at Pondicherry University. Now Working as Smart Card PC/SC Appliction Developer in Pondicherry.

Find Me in FaceScraps

Follow Me At Face Scraps Social Network

Popular Posts

Facebook Like:

Labels

World Famous

free counters

Traffic

Revolver Maps